மாட்டிக்கொள்ளுதல்



ஒரு தாவுதலுக்கும் ஒளிதலுக்கும்
நடுவே
திணறிக்கொண்டிருக்கிறது பிரியம்.
வெயில் வந்துவிட்ட மழை மதியத்தில்
முள்வேலிகளில்
பெயரறியாத அந்த பிளாஸாவின்
எஸ்கலேட்டரில்
ஆளில்லாத் தண்டவாளங்களில்
திரையரங்கின் அரையிருட்டில்
ஃபேஸ்புக்கின் கடவுச்சொல்லில்
சிவன் கோவில் அர்ச்சனைகளில்
பர்ஸுக்குள் ஒளித்துவைத்த புகைப்படத்தில்
இப்படி ஞாபகக் குப்பையை கிளறிவிடும்
கவிதைகளில் என எவ்வெவ்வாறோ
தப்பித்து விடுகிறேன்.
எனினும் அவ்வப்பொழுது மாட்டிக்கொள்கிறேன்
அஜாக்கிரதையாகவும்
சில நேரங்களில் விரும்பியும்.
*************************************************************************************

Comments

Post a Comment